RSS

Tamil manaivi kavithai - kanavan manaivi kavithaigal in tamil

பின் தூங்கி முன் எழுந்து 
என் தூக்கம் ரசித்த உன்னை 
கடைக் கண்ணால் நான் ரசிப்பேன் 
உன் நனைந்த உடலழகை !! 

அடுப்பூதி தேநீர் வைத்து 
கடிக்க பால் அப்பமும் வாங்கி 
கால்தொட்டு எனை எழுப்பி 
கரம் பிடித்து உயர்த்தித் தந்தாய் !! 

என் உடைகள் தொட்டலைவதில் 
என்னபெருமிதம் உனக்கு 
அழுக்கடையும் முன்னே 
அழுக்ககற்ற எடுத்துச்செல்வாய் !! 

உணவு பரிமாறுகையில் 
நல்லுணவாய் எனக்குவைத்து 
நான் உண்ண நீ ரசித்து 
என் எச்சுணவில் என்ன சுகம் கண்டயோ ? 

இவற்றுக்கல்லாம் பரிகாரம் 
நான் என்ன செய்தேன் 
உன் கரம் பிடித்து மனையாக்கி 
அதிகாரம்தான் செய்தேன் !! 

கட்டில் சுகம் காண அணைத்திருப்பேன் 
காதோரம் ரகசியம் பேசிருப்பேன் இருந்தும் 
உன் முன்னே உனைப் புகழவில்லை 
ஏன் இந்த ஆணவம் எனக்கு !! 

ஆண் மகன் என்று நான் நினைத்திருப்பேன் 
அடுப்படிப்பணியாள் நீ என்று 
அறிவீனமாய் வீழ்ந்திருப்பேன் - பெண்ணே 
அறியவில்லை உன் மகிமை !! 

உன் தாய்மைக்கு இனி நான் அடிமை 
உன் கால் பணிந்து 
உனைப்போற்றி வாழ்ந்திடுவேன் 
தலைவன் போற்றும் என்னவளே !!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment